

புத்தகம் வாங்க வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்க செய்வது வரவேற்கத்தக்கது...
சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பவர்கள்கூட , வேலூருக்கு சென்று, நெரிசல் இல்லாமல் புத்தகங்கள் பார்வையிட்டு தேவையானதை வாங்க , இந்த கண்காட்சி உதவுகிறது.
தினமும் முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள், இலக்கிய அமர்வுகள் நடக்கின்றன..
வரலாற்று சிறப்பு மிக்க வேலூரை சுற்றி பார்த்து விட்டு அப்படியே புத்தகங்களையும் பார்வையிட்டு , தேவையானதை வாங்கி கொண்டு வரலாம்.
நான் ரொம்ப நாளாக தேடிய புத்தகங்கள் கண்ணில் பட்ட்ன.. தள்ளுபடி விலையில் வாங்கிக் கொண்டேன்..
தேடிய புத்தகங்கள் சில கிடைக்கவில்லை.. அதாவது என் கண்ணில் படும்படி வைக்கப்பட வில்லை... ( ஜெயமோகனின் கொற்றவை , கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம், தாஸ்தயெவ்ஸ்கியின் ஒரு புத்தகம் அங்கு இருந்திருக்க கூடும்.. ஆனால் என் கண்ணில் பட வில்லை )
நான் அவசரமாக இன்னொரு இடம் செல்ல வேண்டி இருந்த்தால் , விசாரித்து வாங்க முடியவில்லை..
அவ்வப்போது மின்சார தடை ஏற்பட்ட்து வருத்தம் என்றாலும், நல்ல முயற்சியை வரவேற்க வேண்டும்...
.
புத்தகம் வாங்க வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்க செய்வது வரவேற்கத்தக்கது...
ReplyDelete....வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்!