நாவல், சிறுகதை என்றெல்லாம் புனைவு எழுத்தைத்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள். சுயசரிதை பாணியிலான எழுத்துக்கள் அலுப்பூட்டகூடியவை என ஜெயமோகன் கூட ஒரு முறை கூறி இருக்கிறார்.
ஆனால் நிகழ்தல்- அனுபவ குறிப்புகள் என்ற ஜெயமோகனது நூலை படித்து முடிக்கையில், புனைவை விட இது போன்ற கட்டுரைகள்தான் சுவையாக இருப்பதாக தோன்றுகிரது.
உண்மையில் இந்த புத்தகத்தை அனுபவ குறிப்புகள் என்று சொல்லிவிட முடியாது.. அதாவ்து இது வெறும் தகவல் தொகுப்பு அல்ல. அவரது அனுபவங்களை அப்படியே தராமால் , சிறுகதை நடையில் தந்துள்ளார். சிறுகதையும், தன் வரலாறும் கலந்த ஒரு வித்தியாசமான – விறு விறு நடையில் புத்தகம் இருக்கிறது..
அவரது குழந்தை பருவமத்தில் தொடங்கி, கடைசியில் அழிவு என்பதை பற்றி பேசி முடிக்கும்போது ஒரு நாவல் போன்ற அழுத்தையும் தருகிறது..
நான் அங்கு போனேன் ,,அதை பார்த்தேன் என்ற சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல், ஒவ்வொன்றையும் எப்படி கவனித்தார், ஒரு விஷயம் நடக்கும் போது நம மனனிலை என்ன என்றெல்லாம் விவரிக்கும்போது அது நம் அனுபவமாக மாறி விடுகிறது.
ஆறு மாத குழைந்தையாக இருக்கும்போது , தன் முதல் நினைவு தொடங்குவதாக , ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.
அதன் பின் அவரது அம்மாவின் தற்கொலை பற்றி அறியும்போது அதிர்ச்சி..
முரட்டுத்தனமான தந்தை , அவரது பாசம் , நேசம் ,தன் மகன் பத்திய சாப்பாடு சாப்பிடும்போது தான் மட்டும் மீன் குழம்பு சாப்பிடாத தன்மை என்றெல்லம் படிக்கும் போது மனிதம் என்பதின் மீதே ஒரு பிரமிப்பு உண்டாகிறது..
தங்கை பற்ரி, அண்னனை பற்ரியெல்லாம் எழுதுகிறார், ஒவ்வொரு சின்ன விஷ்யம் பற்றியும்..
நாம் இந்த அளவு உன்னிப்பாக வாழ்க்கையை வாழ்கிறோமோ என்ற கேள்வி எழுகிரது..
அண்ணனின் படிப்பறிவை ஜாலியாக கிண்டல் செய்துள்லது நல்ல நகைசுவை.
எதற்கெடுத்தாலும் பாய்ந்து அடிப்பது அண்னனுக்கு பழக்க்மாக இருந்தது. அண்ணனுக்கு பிடித்த நடிகர் விஜய்காந்த் தான். அவரைபோலவே சண்டையில் சீறுவார்.. துறை அதிகாரியை தாக்கி, வேலை நீக்கம் செய்யப்பட்டு , அல்லாடியபோதுதான் அது அவ்வலவு சிறந்த வழி இல்லையோ என்ற ஐயம் அண்ணனுக்கு ஏற்பட்டது..
திடீரென அண்ணன் கூப்பிட்டார். “ டேய், உனக்கு ரெண்டு லட்சம் பணம் கிடைத்து இருக்கிறது என பேப்பரில் போட்டு இருக்கிறதாமே ? “ இவர் எங்கே பேப்பர் படித்தார் என எண்ணி “ யார் சொன்னது என்றேன் ..
பள்ளிகாலத்தில் அவரது மகன் சந்தித்த கஷ்டங்களை மறைக்காமல் எழுதி இருப்பது பெரிய விஷயம்.. மக்கு மாணவன் என ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பெற்றொரின் ஆதரவால் தலை நிமிர்வது ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய விச்யம..
ஆனால் துறவிகளால் நடத்தபடும் பள்ளிகளில் தான் அடக்கு முறை அதிகம் என்ற அவர் பார்வை சரியல்ல.
நானும் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் பள்ளியில் படித்தவன் தான்., அங்கே அன்பு மட்டுமே இருக்கும். கண்டுப்பும் இருக்கும் , நேசமும் இருக்கும்..
பணக்கார பள்ளிகளில் வேண்டுமனால் அவர் சொல்லும் நிலை இருக்கலாம்..
சுந்தரராமசாமி, அசோகமிதிரன் , காந்தீயம் , கோமல் சு
வாமினாதன்ஜாதா தற்கொலை ,காதல் என்று ஆழமான விஷ்யங்களும் உண்டு.
ஏ டி எம் கதவை திறக்க தெரியாமல், கதவு கண்ணாடியை உடைத்த காமெடி மேட்டரும் உண்டு. கிளுகிளுப்பு மேட்டர்கலும் உண்டு.
திருக்குறள் பற்றிய பார்வை திருக்குறள் மேல் புதிய காதலையே உண்டாக்கியது.
வாழ்வின் ஒரு மோசமான நேரத்தில், சாராயகடையை நாடி செல்வதும் அங்கு தயக்கி நிற்பதும் சினிமா போன்ற அருமையான காட்சியமைப்பு.
இதை படித்து முடித்த பின், நமக்கு தோன்றுவது, வாழ்க்கை என்பது சிறு சிறு விஷயங்களால் ஆனது. எனவே ஒவ்வொன்ரையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதுதான்.
உயிரமை பதிப்பகம் – ஜெயமோகன் காம்பினேஷனில் இது போல பல புத்தகங்களை எதிர்பார்க்கிறேன் .
நிகழ்தல் – அனுபவகுறிப்புகள்
ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம்
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyDeletethanks
ReplyDeleteபடிக்கத் தூண்டும் படி எழுதி இருக்கிறீர்கள், பார்வையாளன்,பாராட்டுக்கள்
ReplyDeleteGood review
ReplyDeleteThanks,
Venugopal Krishnan