சிறுகதையை விட நாவல்தான் எனக்கு பிடிக்கும்.. அதனால்தான் ஜெயமோகனின் ஊமைசெந்நாய் என்ற சிறுகதை தொகுப்பை ரொம்ப நாளாக படிக்கவில்லை..
ஆனால் இன்று இரவு புத்தகத்தை எடுத்தேன். சும்மா புரட்டி பார்க்கலாம் என பார்த்து மத்தகம் என்ற குறு நாவல் படிக்க ஆரம்பித்தேன்.. கொஞ்ச நேர பொழுது போக்கு என்பதே என் நோக்கம்.
ஆனால், நான் படித்த்தில் முக்கியமான ஆக்கம் இது என படிக்கும் போதே புரிந்த்த்து.. படித்து முடித்த்தும் அது ஏற்படுத்திய தாக்கம்தான், நடு நிசி 12 க்கு இதை எழுத வைத்த்து..
ஒரு நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை இது உண்டாக்கியது..
ஆசான் என்பவர் யானைப்ப்பாகன்.. அவருக்கு கீழ் இருப்பவர்கள் அருணாசலம் , பரமன் , சுப்புக்கண் ஆகியோர்..
கேசவன் என்பது யானையின் பெயர்.. ஒரு ராஜ்ஜியத்தின் ஆதரவே அதர்கு இருக்கிரது , தம்புரானின் நட்பு இருப்பதால் அது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானலும் செய்யலாம், அதை கேட்பார் யாரும் இல்லை.. தம்புரானைதவிர யாரும் அந்த யானை மேல் ஏற முடியாது.
தம்புரானும் யானையும் கொண்டுள்ள நட்பு சாதாரணமானது அல்ல.. ஒரு கட்ட்த்தில் தன்னை கட்டியிருந்த இரும்பு சங்கிலிகளையே அறுத்து கொண்டு , தம்புரானை பார்க்க செல்கிறது..அதை தேட , யானை பாகன் அப்டும் பாடு தனிக்கதை..
தன் உயிரையே பனயம் வைத்து ஆசானை காத்தவன் பரமன்.. அவன் தந்தையும் பாகந்தான்.,..யானையால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட்தும் அவன் அம்ம இன்னொருவனுடன் சேர்ந்து கொள்ள , பரமன் அனாதை ஆகி கஷ்டப்பட்டு , இந்த நிலைக்கு வந்து இருக்கிறான்.
அருணாச்சலத்தை மிரட்டி, அவன் காதலியை அடைகிறான். பதிலுக்கு அருனாசலம் மிரட்டும்போது அவனை கொன்று , யானை மேல் பழியை போட , அதை நம்பும் ஆசான் யானையை விட்டு விலகுகிறார்..
ஒரு அழகியை அடைய, பொது பணத்தை திருடிய பரமன், அதை காட்டி மிரட்டபடும் பொது கொலை செய்கிறான்
இதற்கிடையில் தம்புரான் உடல் நலிவுற , அடுத்து வந்தவர் யானையை விரும்பவில்லை..
அருணாச்சலம் இறந்த்தும் , அவனது மனைவியை தன் ஆதிக்கதுக்குள் கொண்டு வருகிறான் பரமன்..
இது வரை படிக்கும்போது, பரம்னுக்கு பெரிய தண்டனை கிடைக்க போகிறது – கேசவன் யானை அவனை கொல்ல போகிறது என நினைப்போம்..
ஆனால் கிளைமேக்ஸ் வாழ்க்கையை பற்றிய ஒரு பாடம் எடுக்கிரது.. காதல், அதிகாரம், காம்ம் என்பதை பற்றியெல்லாம் யோசிக்க வைக்கிறது..
அதிகாரம் எனப்து காம்ம் போன்ற போதை.. ஆனால் அது எப்போது எப்படி கைமாறும் என யாருக்கும் தெரியாது..
கெட்ட்து செய்பவனுக்கு , கெட்ட்து நடக்கும் என்ர கணக்கெல்லாம் இல்லை..
யார் எப்படி மாறுவார்கள் என்பதும் புதிர்தான்.. உயிரை பணயம் வைத்த பரமன், ஒரு கட்ட்ட்த்தில் துரோகியாக மாறுவது, அதிகார உச்சியில் இருந்த கேசவன் யானை பொறாமை தீயால் பீடிக்கப்படுவது, இன்னொரு யானையை தாக்குவது, வலுவான அந்த யானை பெருந்தன்மையாக கேசவனை மன்னிப்பது, இனி தனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில், கேசவன் யானை பரமன ஆதிக்கத்துக்கு உட்படுவது, பரமனை கொல்ல முயன்ற அருனாசலத்தின் மனைவி, வேரு வழியின்றி பரமனை சரணடைவது என வாழ்வின் அபத்தங்களை , யதார்த்த்தை சொல்கிறது நாவல்..
ஒட்டுமொத்த உலக வரலாறை படித்து முடித்த உணர்வு ஏற்பட்ட்து..
சாதாரனமாக படிப்பவர்களுக்கு , காதல் கற்பு , விசுவாசம் எல்லாம் கிண்டல் செய்யப்பட்து போல தோன்றலாம்.
வரலாறு படித்தவர்கள், அரசியலை கவனிப்பவர்கள், வாழ்வை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த குறு நாவல் நல்ல அனுபவ்மாக இருக்கும்...
இந்த தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகள் பற்றிய என் பார்வை , இரண்டொரு நாட்களில் ...
ஊமைச்செந்நாய்
ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம்
அருமையான விமர்சனம்..
ReplyDeleteதொடர்ந்து நல்ல புத்தகங்கள் பற்றி பகிர்வு செய்யவும்..
அப்படியே நல்ல புத்தகங்களைப் பற்றி அடிக்கடி அறிமுகம் கொடுக்கவும். மிகவும் உதவியாக இருக்கும்.
ReplyDelete