Wednesday, February 26, 2025
நான்காம் வகுப்புப் படித்தவர் நான்கு மொழி அகராதி படைத்தார்
Friday, January 17, 2025
உடனுறை இடாகினி- வாசிப்பு அனுபவம்
மருத்துவர்கள், ஓவியர்கள், மன்னர்கள் என பலரைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.. இப்படி இன்னொருவராக மாறி அவரவர்கள் கோணத்தில் எழுதுவது ஒரு கலை. அவ்வளவு ஏன் .. பெண்ணாக மாறி அவள் உணர்வுகளை சிறப்பாக எழுதும் ஆண்கள் உண்டு,
கதையின் கடைசி வரி என்றல்ல... ஒரு பத்தியின் கடைசி வரிகூட ஒரு ஹைக்கூ கடைசி வரி ட்விஸ்ட்டுடன் இருப்பது இத்தொகுப்பு முழுக்க ரசிக்க வைக்கிறது
உதாரணமாக..
இமயமலை சிதடிப்பூச்சிகள் வித்தியாசமானவை. ஆனந்தக் கூக்குரல் தனது இணைக்கான அழைப்பொலி என்றாலும் கூடவே தனது பதினேழு ஆண்டுகால மௌனத்தின் அனுபவங்களையும் சேர்த்தே கட்டுடைக்கின்றன. பெண் சிதடிப்பூச்சி வெளியிடும் முட்டைகள் யாவும் ஒன்றரை மாதத்தில் பொரிந்துவிடுகின்றன. ஆனாலும் தரையில் விழும் இளம் பூச்சிகள் மண்ணுக்குள் நுழைந்து மரத்தின் வேர் முனைகளில் தங்கி தனக்கான உணவை உண்டபடி வெளியே வராமல் கிட்டத்தட்ட பதிமூன்றிலிருந்து பதினெழு ஆண்டுகள் வரை மௌனத்தில் வாழ்கின்றன.
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மௌனவிரதம் களையும் சிதடிப்பூச்சிகள் தங்களது சக்திகள் முழுவதையும் திரட்டி ஒரு வாரம் முழுவதும் ஆத்ம கானத்தை இடைவிடாது இசைப்பதில் மும்முரமாகின்றன. கூடவே சந்ததிகள் உருவாக்கத்திற்கான செயல்களிலும் வேகமாக ஈடுபடுகின்றன. வாரத்தின் இறுதியில் புகார்கள் இன்றி இறந்தும் போகின்றன.
என்னிடம் ஏதேனும் புகார்கள் இருக்கின்றனவா?
இதில் உள்ள கதைகள் சில ஒன்றையொன்று நிரப்புவதாக முழுமை செய்வதாக இருப்பது சிறப்பு
உதாரணமாக பாலியல் வன்முறை குறித்துப்பேசும் ஹெப்பாவு
கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்
ரசித்த சில வரிகள்
தனஸ்ரீ ராகம்போல் சுயத்தின் ஆழத்திற்கும் விளிம்பிற்கும் மாறி மாறிப் பயணித்துக்கொண்டிருந்தன.
இன்றைக்கு நாள் முழுவதும் சூரியனைக் காணமுடியவில்லை என்றாலும் மங்கிய வெளிச்சம் சித்திரத்தில் உறைந்திருக்கும் வண்ணம்போல் அசைவில்லாத தியானத்திலிருந்தது. காற்றில் கடுங்குளிர் அதிகம் என்பதை மூக்கிலும் கண்களிலும் வழியும் நீர் அறிவுறுத்திக்கொண்டிருந்தது. சிகரங்களில் இருள் கவிழ நேரமாகலாம்
"உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரைப் பார்க்கப்போ பிரம்மச்சரியம் தீட்சையை அங்கதான் வாங்கப்போறேன்.
"வேணாம் தம்பி, வீட்டுக்குப் போ. கங்கா தண் கொடுத்துட்டு சந்தோஷமா வேலையைத் தேடு. ஏதோ ஒன் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். நிதானமாயி நிச்சயம் ஏதொவொன்னைக் கத்துக்கலாம். உனக்குக் கொஞ் விபரம் தெரியுது. இருந்தாலும் நீ நினைக்கிற மாதிரி சாதார கிடையாது. உஜ்ஜயினி பக்கம் மட்டும் போயிடாதே. ஒருமு உள்ள நுழைஞ்சிட்ட நீ வெளியே போகவே முடியாது. விடமாட்டாங்க. நீ எங்க தப்பிச்சுப் போனாலும் தே தூக்கிடுவாங்க."
Friday, January 3, 2025
தனிமையின் நூறாண்டுகள் - பாத்திரங்கள் பேசுகின்றன
காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் -இன் தனிமையின் நூறாண்டுகள் நாவலின் பிரதானப் பாத்திரங்களில் நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த பாத்திரங்கள் பேசுகின்றன
மார்கோ கோன்சலஸ்
மார்க்வெஸின் உலகம் கனவுக்கானது , படிப்பதற்கானது அன்று என்கிறார்கள். மாந்திரீக யதார்த்தம், மனித மோதல்கள் மற்றும் ஒரு நாகரிகத்தை உருவாக்கும் இந்த கவிதை உலகில் காலடி எடுத்து வைப்பது எப்படி இருந்தது?
ஜோஸ் ஆர்காடியோவாக நடிப்பது ஒரு சவாலுக்கு சமமானது. எப்பொழுதும் விளையாடுவதையும் அது தரும் சாகசங்களையும் ரசிக்கும் குழந்தையைப் போல் அந்த அனுபவம் இருந்தது. அதுதான் நாம் உருவாக்கும் உலகில் நம்மை இழப்பதற்கு வழி வகுத்தது . நடிகர்களான எங்களுக்கு மாயாஜாலம் முக்கிய வார்த்தையாக இருந்தது; ஒருவர் செட்டில் திறந்த மனதுடன் இருந்து வருவதை ஏற்க வேண்டும் ஜோஸ் ஆர்காடியோ ஒரு இயற்கையான சாகசக்காரர், சில சமயங்களில் அவரது முடிவுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனும் அப்பாவித்தனத்துடனும் அணுக்கக்கூடியவர்
இதயத்தில் எளிமையான ஆனால் அவரது சிந்தனைகளில் அப்படி அல்லாத மனிதனைப் புரிந்துகொள்வதில் உங்கள் செயல்முறை என்ன?
ஜோஸ் ஆர்காடியோவைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் பேரார்வம். சில சமயங்களில் பகுத்தறிவு என்பது நமக்கும் நம் திறன்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்துவதாக உணர்கிறேன்
இந்த கேரக்டரை எவ்வித முன் தீர்மானங்களும் இல்லாமல் அணுகினேன். கனவு காண்பது நல்லதுதான், தோல்வியுற்றாலும் பரவாயில்லை என்று ஜோஸ் ஆர்காடியோவை எனக்குக் கற்பிக்க நான் அனுமதித்தேன். நீங்கள் செய்வதை நம்புவதற்கும் அன்பாக இருப்பதற்கும் உங்களை அனுமதிக்க வேண்டும். நான் அவரது பார்வைக்கு முழு மனதுடன் பணிந்து, எந்த எல்லையும் இல்லாமல் அவரை நடித்தேன்.
இன்றைய காலகட்டத்தில் மார்க்வெஸின் பொருத்தப்பாடு என்ன என்று நினைக்கிறீர்கள்?
என்னைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சியும் புத்தகமும் அடுத்த தலைமுறைக்கு பலன் அளிக்கிறது. தொடர் மட்டுமின்றி புத்தகத்தின் மூலமும் கிடைக்கும் இந்த அறிவை நம் மனதிற்கு உணவாக ஊட்ட வேண்டும். இது பலம் மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருவது, உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் புத்தகத்தின் முடிவில், அவர் உங்களை கொஞ்சம் இருளான நம்பிக்கை இல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் அது அவ்வாறு உணரப்படக்கூடாது. அவர் நோபல் பரிசைப் பெற்றபோது, அவரது ஏற்பு உரைக்கு "லத்தீன் அமெரிக்காவின் தனிமை" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அவர் மூலம் எமது உலகத்தைப் பற்றிய புதிய திறப்புகள் கிடைத்தன
.புத்தகம் என் வாழ்வின் ஒரு பகுதி'
வினா மச்சாடோ
மார்க்வெஸின் உலகம் கனவுக்கானது , படிப்பதற்கானது அன்று என்கிறார்கள். மாந்திரீக யதார்த்தம், மனித மோதல்கள் மற்றும் ஒரு நாகரிகத்தை உருவாக்கும் இந்த கவிதை உலகில் காலடி எடுத்து வைப்பது எப்படி இருந்தது?
நான் கொலம்பியாவின் கரீபியன் பகுதியைச் சேர்ந்தவள் , அங்குதான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பிறந்தார். இதைத்தான் நான் துல்லியமாக உணர்ந்தேன்; நீங்கள் அதை விளக்க முடியாது; நீங்கள் அதை வாழ வேண்டும், நீங்கள் அதை விட்டுவிட வேண்டும். ஒருவர் மாந்திரீகமாகவும் , உங்களைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். நம் இயல்பில் அது இருக்கிறது. ஒரு கரீபியன் பெண்ணாக, நான் சொல்கிறேன், அவர் புத்தகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு அது உண்மையாக இருந்து, அதை என்னுள் வளர செய்து, கொலம்பியனை அதில் கலப்பதாகும் அதுதான் நான் செய்த வேலை. மேலும், அவர் அவளை எழுதியதைப் போலவே அவளை புரிந்து கொள்ள வேண்டும்
பிலார் டெர்னேராவைப் பற்றி நாம் பேசும்போது, அவள் சிரமமின்றி தனது பாலுணர்வில் வசதியாக இருக்கும் ஒரு பெண். அவளுடைய ஆளுமையின் ஒரு அம்சம் உங்களை ஈர்த்தது ?
என்னைப் பொருத்தவரை, பிலார் அவளுடைய காலங்கள் மற்றும் சகாப்தத்திற்கு முன்னால் ஒரு பெண். அவள் சுதந்திரமானவள், பியூண்டியா குலத் தலைவரான உர்சுலாவின் சீடரும் கூட
. உர்சுலாவில் நீங்கள் ஒரு பெண் தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்திருப்பதையும் வலுவான மற்றும் ஆதரவான பெண்பால் இருப்பையும். காண்கிறீர்கள், அவள் இந்த தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் வாழ்க்கையை அனுபவிக்கிறாள். இந்த வசீகரப் பெண்ணின் மாந்திரீக மர்மத்திற்கு நான் விருப்பத்துடன் என்னை ஒப்புக்கொடுத்தேன்.
இது மிகவும் விரும்பப்படும் படைப்பு, அற்புதமான பராட்டுகள் பல பெற்றது ஆனாலும் , சினிமா சுதந்திரத்தை நூலுடன் ஒப்பிடக்கூடிய சற்று சந்தேகம் கொண்ட ரசிகர்கள் எப்போதும் இருப்பார்கள்.
நானும் ஒரு ரசிகைதான், இந்தப் புத்தகத்தை பலமுறை வாசித்து மீண்டும் வாசித்து, அது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. நான் சொல்வேன், அதை ரசியுங்கள், ரசியுங்கள், ஏனென்றால் எங்களில் பலர் இந்த உலகத்தை திரையில் உயிர்ப்பிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம், எந்த அம்சத்திலும் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. இந்த உலகத்தை மீண்டும் உருவாக்க நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது.
நமக்கெல்லாம் பாத்திரங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளன; பிலரை வெளிக்கொணர்தல் கடினமாக இருந்தது. அவளையும் பிற பாத்திரங்களையும் என் பார்வையில் சற்று அனுபவியுங்கள்
Wednesday, January 1, 2025
புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாவல்
ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கணத்தை மட்டும் சொல்கின்ற ஹாலிவுட் படங்கள் உண்டு. அதுபோல, புத்தகக் கண்காட்சி நடத்துதல் என்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு படைக்கப்பட்ட ஒரு நாவல்தான் அகிலன் கண்ணன் அவர்களின் வேர்பிடி மண் என்ற குறுநாவல்.
கணவன் மனைவி உறவு, நடுநிலைப்பார்வையில் ஒரு சிக்கலை அணுகல், நட்பு, அரசு இயந்திரம் செயல்படும் முறை, ஆங்காங்கு இருக்கும் நல்ல அதிகாரிகள் , ஏறிய ஏணியை எட்டி உதைத்தல் என பல விஷயங்கள் ஆங்காங்கு பாயசத்தில் கிடக்கும் முந்திரி போல சுவைக்கின்றன.
இரும்புச் சட்டக நிறுத்தம் ( ஸ்டாண்ட் ), நெறியாள்கை போன்ற அழகுத் தமிழ்ச் சொற்கள் மனதை அள்ளுகின்றன.. சொற்களை சிதைத்து விடக்கூடாது என்பதற்கு மு. வ ஒரு யுக்தியைக் கையாள்வார்... அதுபோன்ற ஒரு யுக்தியை அகிலன் கண்ணனும் பயன்படுத்தியுள்ளார்.
தில்லி புத்தகக் கண்காட்சியை விளக்கும்போது நாமே அங்கு நேரில் சென்ற உணர்வு உருவாகிறது.
கல்வி சார்ந்து வட இந்தியாவைத் தாழ்வாகவும் தென்னிந்தியாவை உயர்வாகவும் நினைத்துக் கொள்ளும் போக்கு நம்மிடையே உண்டு. ஆனால் ஆலயங்களை சிறப்பாகப் பராமரித்தல், ஐ ஏ எஸ் தேர்ச்சி, தொழில்துறை, இலக்கிய நிகழ்வுகள் என பலவற்றில் அவர்கள் நம்மைவிட சிறப்பாகவே உள்ளனர். ஒரு சில மாநிலங்களை வைத்து வட இந்தியாவையே தாழ்வாக நினைப்பது நமக்குத்தான் தீமை என்பதை இருவேறு புத்தக கண்காட்சிகள் மூலம் சுட்டிக்காட்டுகிறது நாவல்.
ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் ஒரு நாவலின் இலக்கிய மதிப்பை பாதிக்காது என்பது உண்மை.
ஆனால் இதை பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டு இன்று பல பதிப்பகங்கள் மெய்ப்புப் பார்த்தல் என்ற துறையே இல்லாமல் தப்பும் தவறுமாக நூல்களை வெளியிடுகின்றன.. சில்லறை சில்லரை, கருப்பு கறுப்பு போன்ற குழப்பங்கள் வந்தால் முன்பெல்லாம் அச்சு நூல்களில் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்வது வழக்கம்.
இந்த பிரஞ்ஞையுடன் தான் பாரம்பரிய பதிப்பகங்கள் செயல்பட்டன..கையில் காசு, வாயில் தோசை என்ற நோக்கில் செயல்படும் இன்று புற்றீசல்களாகக் கிளம்பியுள்ள பல பதிப்பகங்கள் இவற்றில் கிஞ்சித்தும் அக்கறை செலுத்துவதில்லை’
“ அச்சுப்பிரதியில் பிழையிருப்பின் அது நாம் உண்ணும் சோற்றில் கல் போலாகும் ; சில நேரம் பொருளே மாறுபட்டுவிடும் . அடுத்த தலைமுறைக்கு ஒருவேளை தவறான பதிவு சென்றுவிடக்கூடாதல்லவா ?
என்ற வரி வெகு நேரம் யோசிக்க வைத்தது..
இயல்பான நகைச்சுவையும் மொழி விளையாட்டும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன
உதாரணமாக புத்தகக் கண்காட்சியை துவக்கி வைக்க யாரும் முன்வராமல், அவர்களாகவே ஆரம்பித்தனர் என்பதை கேலியாகச் சொல்லும் வரிகள்
புத்தகக் காட்சி தானாகவே திறந்து கொண்டது . ஆம் , கலை நிகழ்ச்சி , ஊர்வலம் இவைகள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன . அவை போல் அல்லாமல் புத்தகக் காட்சியை யாரும் திறந்து வைக்க வில்லை
பிடித்த வரிகள் சில:
உணர்வு வெளிப்பாட்டிலோ அவ்வறிவு , பாலில் தயிரெனப் பதுங்கிக் கொள்ளுகிறது .
சிறு நூல் ஆனால் நிறைவான நூல்
வேர்பிடி மண் ( நாவல் ) ஆசிரியர்: அகிலன் கண்ணன்
தமிழ்புத்தகாலயம்